கோவை சூலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு

கோவை சூலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர்களின் நலனுக்காக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: கோவை சூலூர் கலங்கல் சாலையில் உள்ள புத்ததேவ் பட்டாச்சார்யா நினைவு அரங்கில் (எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து தலைமை உரையாற்றினார். உயிரிழந்த பணியாளர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை இணைச் செயலாளர் எம்.சசிகுமார் முன்மொழிந்தார். உதவி தலைவர் சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார்.

சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்க உரை நிகழ்த்தினார். சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் சரவணன் முன்வைத்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு செலவு அறிக்கையை எழுத்துப்பூர்வமாக முன் வைத்தார்.

உதவி தலைவர் பாலகுமார், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பின் உதவி தலைவர் ஐயப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சங்க நிர்வாகி பிலிப்ஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், பத்து முக்கிய கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. அவை:

1. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல்

2. காலிப் பணியிடங்களை நிரப்புதல்

3. பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணி வழங்குதல்

4. வாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பதவிகளை வழங்குதல்

5. எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்துள்ள மின்பணியாளர்களுக்கு கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பதவிகளை வழங்குதல்

6. கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்க அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு வாரியமே பராமரிப்பு பணிகளை நிர்வகித்தல்

7. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவே அகவிலைப்படி உயர்வை வாரிய பணியாளர்களுக்கும் வழங்குதல்

8. வாரியத்தில் பணி ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வு கால பலன்களை வழங்குதல்

குடிநீர் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் கோரிக்கைகள் நியாயமானவை. அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...