கோவை மாநகராட்சி பெண் ஊழியருக்கு லஞ்சம் வாங்கியதற்காக ஓராண்டு சிறை தண்டனை

கோவை மாநகராட்சியின் முன்னாள் வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரி, சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.7,000 லஞ்சம் கேட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.


கோவை: கோவை மாநகராட்சியின் முன்னாள் வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரி, சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டில், கோவை சலீவன் வீதி காந்திபூங்கா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரவேல் என்பவர் நிலம் வாங்கினார். அந்த நிலத்தின் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 20-வது வார்டில் அப்போது வரி வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமாரியை அணுகினார்.

சொத்துவரியில் பெயரை மாற்றுவதற்கு வசந்தகுமாரி ரூ.7,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துகுமரவேல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வசந்தகுமாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மோகனாரம்யா, வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரிக்கு ஓராண்டு சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் லஞ்சம் வாங்கும் பழக்கத்தை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...