கோவை மாநகராட்சி பெண் ஊழியருக்கு லஞ்சம் வாங்கியதற்காக ஓராண்டு சிறை தண்டனை

கோவை மாநகராட்சியின் முன்னாள் வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரி, சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.7,000 லஞ்சம் கேட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.


கோவை: கோவை மாநகராட்சியின் முன்னாள் வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரி, சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டில், கோவை சலீவன் வீதி காந்திபூங்கா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரவேல் என்பவர் நிலம் வாங்கினார். அந்த நிலத்தின் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 20-வது வார்டில் அப்போது வரி வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமாரியை அணுகினார்.

சொத்துவரியில் பெயரை மாற்றுவதற்கு வசந்தகுமாரி ரூ.7,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துகுமரவேல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வசந்தகுமாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மோகனாரம்யா, வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரிக்கு ஓராண்டு சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் லஞ்சம் வாங்கும் பழக்கத்தை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...