கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை கணுவாய் தடுப்பணையை புனரமைக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இப்பணி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.



கோவை: கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் அமைந்துள்ள கணுவாய் தடுப்பணையை புனரமைப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. கெளசிகா நீர்கரங்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார்.



இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், கோவை நீர்வளத்துறை பாசன உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அம்சராஜ் மற்றும் பன்னிமடை ஊராட்சி தலைவர் பி.எஸ்.எம். ரத்தினம் மருதாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பூமி பூஜை செய்து விழாவை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கணுவாய் தடுப்பணையை புனரமைக்க கெளசிகா நீர்கரங்கள் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.

இந்த குழுவினர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் கணுவாய் தடுப்பணையை தூர்வாரும் பணியில் ஈடுபடுவர். இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கணுவாய் தடுப்பணை வழியாக சின்ன வேடம்பட்டி ஏரிக்கு மண்ணரிப்பின்றி செல்ல முடியும்.

இந்த முயற்சியால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...