இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கோவையில் புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகளை சந்தித்தார்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள் புற்றுநோய் சிகிச்சை பெறும் 14 குழந்தைகளை சந்தித்து ஊக்கமளித்தனர். புச்சி பாபு கிரிக்கெட் போட்டிக்காக கோவை வந்த வீரர்கள் இந்த சந்திப்பை மேற்கொண்டனர்.



Coimbatore: புச்சி பாபு கிரிக்கெட் போட்டி 2024க்காக கோவை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மும்பை அணியின் வீரர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஒரு அங்கமான SRIOR - ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் இலவச புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர்.

2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடியபோது சூர்யகுமார் யாதவின் அதிரடி கேட்ச், போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. இதற்குப் பின் இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்பிறகு ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோவாக மாறிய சூர்யகுமார் யாதவ், கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தது மூலம் ஹீரோவுக்கும் ஒரு படி மேல் சென்றுள்ளார் எனக் கூறலாம்.



இந்த சந்திப்பின் போது ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் இலவச புற்றுநோய் சிகிச்சை வார்டில் உள்ள குழந்தைகள், சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவை, சிவப்பு ரோஜாக்களை வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதையடுத்து வீரர்கள் குழந்தைகளின் மினி கிரிக்கெட் பேட்களில் கையொப்பமிட்டு அவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். சில குழந்தைகளிடம் சூர்யகுமார் யாதவ் உரையாடி அவர்களின் ஆர்வங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.



தங்களுக்குப் பரிசளித்த வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உருவப்படங்களை நினைவுப் பரிசுகளாக குழந்தைகள் வழங்கினர். இந்த குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமென சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவினர் வாழ்த்தினர். இதையடுத்து, இந்த வார்டில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சிகிச்சையின் காலம் குறித்து சூர்யகுமார் யாதவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர்.பி.குகனிடம் கேட்டறிந்தார்.



டாக்டர்.பி.குகன் குழந்தைகளுக்கு இங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி அவரிடம் விளக்கினார். இந்த வார்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் 2005 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டதாகவும், இதில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.



ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் புற்றுநோயியல் துறையின் கடின உழைப்பு மற்றும் இந்த உன்னத நோக்கத்துக்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அளித்து வரும் மிகப்பெரிய ஆதரவை சூர்யகுமார் யாதவ் பாராட்டினார். இந்த தருணத்தின் போது எஸ்.என்.ஆர். & சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், SRIOR-ன் இயக்குனர் டாக்டர் பி. குகன்; புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...