கோவையில் வேளாண் இயந்திரங்கள் குறித்த முகாம்: இ-வாடகை செயலி மூலம் உபகரணங்களை பெறலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரிப்பு குறித்த முகாம் நடைபெற்றது. இ-வாடகை செயலி மூலம் விவசாயிகள் உபகரணங்களை வாடகைக்கு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவருடன் முகாமைப் பார்வையிட்டார்.

இந்த முகாமில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, "விவசாயத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு உபகரணங்கள் குறித்தும் அதற்கான திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உபகரணங்களை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் அதற்கான பராமரிப்பு குறித்தும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.



மேலும் அவர், "இ-வாடகை என்ற செயலி மூலம் விவசாயிகள் உபகரணங்களை வாடகைக்கு பெற்று பயன்பெறலாம். இந்த செயலியை உபயோகிப்பதற்கான பயிற்சியும் இங்கு வழங்கப்படுகிறது. கோயம்புத்தூரில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரமயமாக்களை அதிகபடுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்நிகழ்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.



உணவு பாதுகாப்பு மற்றும் பொது இடங்களில் போட்டிகள் நடத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர் பேசினார். "உணவகங்களில் பாதுகாப்பான உணவு வழங்கப்பட வேண்டும். பொது இடங்களில் போட்டிகள் நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...