கோவை உட்பட நான்கு மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நான்கு பெரிய மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து மூலம் வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகளையும் கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.



சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் வருகிற பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறையின் மாவட்ட சுகாதார அலுவலர்களின் சார்பில், குரங்கம்மை பாதிப்புகள் குறித்த பதாகைகள் விமான நிலையத்தில் பரவலாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு கல்லூரி மருத்துவமனை, திருச்சிகி.ஆ.பெ. விசுவநாதம் அரசு கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளிலும் குரங்கமைக்கென்று பிரத்தியேக வார்டுகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.



மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை குரங்கம்மை பாதிப்பு இந்தியாவில் எங்கும் கண்டறியப்படவில்லை எனக்கூறி இருப்பதாகவும் இந்த சூழலில் கேரள எல்லைப் பகுதியில் குரங்கமை பாதிப்பு குறித்து சோதிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் மருந்தகம் குறித்து,அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய்களுக்குரிய மருந்துகள் இலவசமாக தரப்பட்டு கொண்டிருப்பதாகவும் மருந்துகளை குறைந்த விலையில் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு முதல்வர் மருந்தகத்தை முதல்வர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், முதல்வர் அறிவித்திருப்பது போல் பொங்கல் தினத்தன்று ஆயிரம் மருந்தகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார்.

எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது என்றும் பாதுகாப்பு குறைபாடுகள் என்று எந்த மருத்துவமனையிலும் இல்லை என்றும் கூறிய அவர், மருத்துவக் கல்லூரிகளிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள பல்நோக்கு பிளாக்கில் ஒரு தளம் மட்டும் இயங்கி வருவது குறித்து, தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு தளமும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...