கோவை உட்பட நான்கு மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நான்கு பெரிய மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து மூலம் வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகளையும் கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.



சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் வருகிற பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறையின் மாவட்ட சுகாதார அலுவலர்களின் சார்பில், குரங்கம்மை பாதிப்புகள் குறித்த பதாகைகள் விமான நிலையத்தில் பரவலாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு கல்லூரி மருத்துவமனை, திருச்சிகி.ஆ.பெ. விசுவநாதம் அரசு கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளிலும் குரங்கமைக்கென்று பிரத்தியேக வார்டுகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.



மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை குரங்கம்மை பாதிப்பு இந்தியாவில் எங்கும் கண்டறியப்படவில்லை எனக்கூறி இருப்பதாகவும் இந்த சூழலில் கேரள எல்லைப் பகுதியில் குரங்கமை பாதிப்பு குறித்து சோதிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் மருந்தகம் குறித்து,அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய்களுக்குரிய மருந்துகள் இலவசமாக தரப்பட்டு கொண்டிருப்பதாகவும் மருந்துகளை குறைந்த விலையில் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு முதல்வர் மருந்தகத்தை முதல்வர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், முதல்வர் அறிவித்திருப்பது போல் பொங்கல் தினத்தன்று ஆயிரம் மருந்தகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார்.

எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது என்றும் பாதுகாப்பு குறைபாடுகள் என்று எந்த மருத்துவமனையிலும் இல்லை என்றும் கூறிய அவர், மருத்துவக் கல்லூரிகளிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள பல்நோக்கு பிளாக்கில் ஒரு தளம் மட்டும் இயங்கி வருவது குறித்து, தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு தளமும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...