கோவையில் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் தொடக்கம்

கோவையில் ஆகஸ்ட் 30 முதல் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் நடைபெறுகிறது. இந்த போட்டி இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற வீரர்களுக்கு உதவும் என தமிழ்நாடு செஸ் அசோசியேசன் தலைவர் தெரிவித்தார்.



கோவை: கோவை அலங்கார் ஹோட்டலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சக்தி சுகர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.



தமிழ்நாடு செஸ் அசோசியேசன் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம் கூறுகையில், "2400 பாயிண்டுகள் மற்றும் மூன்று டைட்டில் வாங்கும் வீரருக்கு இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற பதவி வரும். அதை பெறுபவர்கள் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும். 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. அதற்கு முன்பாக 100 இன்டர்நேஷனல் மாஸ்டர்களை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சார்பில் கடந்த ஒரு வருடமாக இந்த டோர்னமெண்டை நடத்தி வருகிறோம்," என்றார்.

இந்த ஆண்டு இதுவரை, இந்தியாவில் 33 நார்ம்ஸ் வாங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு மட்டும் 13 நார்ம்ஸ் வாங்கியுள்ளது. மீதியுள்ளதில் 6 நார்ம்ஸ் இந்தியாவிலும் மற்றவைகளை வெளிநாட்டவரும் வாங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள நார்ம்ஸில் மூன்றில் இரண்டு பங்கை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த டோர்னமெண்ட் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நான்கு பேர் இன்டர்நேஷனல் மாஸ்டர் டைட்டிலை வாங்கி உள்ளனர்.

கோவையில் மட்டும் 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் இருப்பதாகவும் இதில் 100 முதல் 120 பேர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதாகவும் செஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களை செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்ட ஊக்குவித்து வருவதாகவும் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு அசோசியேஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 30 கிராண்ட் மாஸ்டர்கள் இருப்பதாகவும் அடுத்து எட்டு ஆண்டுகளில் 100 கிராண்ட் மாஸ்டர்கள் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...