கோவையில் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் தொடக்கம்

கோவையில் ஆகஸ்ட் 30 முதல் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் நடைபெறுகிறது. இந்த போட்டி இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற வீரர்களுக்கு உதவும் என தமிழ்நாடு செஸ் அசோசியேசன் தலைவர் தெரிவித்தார்.



கோவை: கோவை அலங்கார் ஹோட்டலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சக்தி சுகர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.



தமிழ்நாடு செஸ் அசோசியேசன் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம் கூறுகையில், "2400 பாயிண்டுகள் மற்றும் மூன்று டைட்டில் வாங்கும் வீரருக்கு இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற பதவி வரும். அதை பெறுபவர்கள் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும். 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. அதற்கு முன்பாக 100 இன்டர்நேஷனல் மாஸ்டர்களை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சார்பில் கடந்த ஒரு வருடமாக இந்த டோர்னமெண்டை நடத்தி வருகிறோம்," என்றார்.

இந்த ஆண்டு இதுவரை, இந்தியாவில் 33 நார்ம்ஸ் வாங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு மட்டும் 13 நார்ம்ஸ் வாங்கியுள்ளது. மீதியுள்ளதில் 6 நார்ம்ஸ் இந்தியாவிலும் மற்றவைகளை வெளிநாட்டவரும் வாங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள நார்ம்ஸில் மூன்றில் இரண்டு பங்கை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த டோர்னமெண்ட் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நான்கு பேர் இன்டர்நேஷனல் மாஸ்டர் டைட்டிலை வாங்கி உள்ளனர்.

கோவையில் மட்டும் 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் இருப்பதாகவும் இதில் 100 முதல் 120 பேர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதாகவும் செஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களை செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்ட ஊக்குவித்து வருவதாகவும் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு அசோசியேஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 30 கிராண்ட் மாஸ்டர்கள் இருப்பதாகவும் அடுத்து எட்டு ஆண்டுகளில் 100 கிராண்ட் மாஸ்டர்கள் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...