கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரம்: 5 இன்ச் முதல் 10 அடி வரை சிலைகள் தயார்

விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், கோவையில் 5 இன்ச் முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் நட்பு பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த சிலைகள் பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.



கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலை தயாரிப்பாளர்கள் வேகமாக பணியாற்றி வருகின்றனர்.



மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்பதால், 5 இன்ச் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களிமண் மற்றும் காகிதக்கூழ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.



இந்த ஆண்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.



மச்ச விநாயகர், சிம்ம விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயருடன் கூடிய விநாயகர், Bike விநாயகர், கங்காருவுடன் கூடிய விநாயகர் என பல்வேறு வகையான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு டிஸ்டெம்பர் பெயிண்ட் கொண்டு வர்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...