கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரம்: 5 இன்ச் முதல் 10 அடி வரை சிலைகள் தயார்

விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், கோவையில் 5 இன்ச் முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் நட்பு பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த சிலைகள் பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.



கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலை தயாரிப்பாளர்கள் வேகமாக பணியாற்றி வருகின்றனர்.



மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்பதால், 5 இன்ச் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களிமண் மற்றும் காகிதக்கூழ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.



இந்த ஆண்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.



மச்ச விநாயகர், சிம்ம விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயருடன் கூடிய விநாயகர், Bike விநாயகர், கங்காருவுடன் கூடிய விநாயகர் என பல்வேறு வகையான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு டிஸ்டெம்பர் பெயிண்ட் கொண்டு வர்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...