உடுமலை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பொள்ளாச்சி எம்பி ஆய்வு: பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி ஆய்வு மேற்கொண்டார். பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்துகள் குறித்து புகார் அளித்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேடப்பட்டி நரசிங்கபுரம், பாறைமேடு, மைவாடி, போளரப்பட்டி ஆகிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள குறைகளை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் ஆய்வின் போது 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எம்பியை சந்தித்தனர். இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்வதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.



இதனால் எம்பி முன்னிலையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இப்பகுதியில் தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்படும் என பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நாகராஜன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...