பொள்ளாச்சியில் அதிக பாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல்: ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு

பொள்ளாச்சி பகுதியில் கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதில், சில லாரிகள் சட்டவிரோதமாக அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது.

கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனை சாவடிகள் வழியாகவும், மாற்றுப் பாதைகள் வழியாகவும் கேரளாவுக்கு அதிக அளவு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இணை போக்குவரத்து ஆணையர் சிவக்குமரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று இரவு சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.



இந்த சோதனையின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக 20 டன் கற்கள் ஏற்றிச் செல்லப்பட்ட 10 லாரிகள் கண்டறியப்பட்டன. இந்த லாரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட 10 லாரிகளுக்கு மொத்தம் ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சோதனைச் சாவடிகளிலும், மாற்று வழிகளிலும் வாகனங்கள் செல்கின்றதா என்பதை கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...