பொள்ளாச்சியில் அதிக பாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல்: ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு

பொள்ளாச்சி பகுதியில் கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதில், சில லாரிகள் சட்டவிரோதமாக அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது.

கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனை சாவடிகள் வழியாகவும், மாற்றுப் பாதைகள் வழியாகவும் கேரளாவுக்கு அதிக அளவு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இணை போக்குவரத்து ஆணையர் சிவக்குமரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று இரவு சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.



இந்த சோதனையின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக 20 டன் கற்கள் ஏற்றிச் செல்லப்பட்ட 10 லாரிகள் கண்டறியப்பட்டன. இந்த லாரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட 10 லாரிகளுக்கு மொத்தம் ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சோதனைச் சாவடிகளிலும், மாற்று வழிகளிலும் வாகனங்கள் செல்கின்றதா என்பதை கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...