பொள்ளாச்சி: பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து பெரிய ரத்ததான முகாமை நடத்தினர். 200 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கியுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய ரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் ரெட் கிராஸ் மற்றும் NSS மாணவர்கள் இந்த முகாமில் ரத்த தானம் வழங்கினர். பொள்ளாச்சி ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, செவிலியர்கள் அன்னக்கொடி, அனுராதா, திலகமணி மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, ஆய்வக நிபுணர் மகாலட்சுமி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் கலந்து கொண்டனர்.



இவர்களுடன் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களும், திருச்சியிலிருந்து வந்த செவிலியர் கல்லூரி மாணவிகளும் இந்த முகாமில் பங்கேற்றனர். இந்த முகாமில் 200 மாணவர்கள் மற்றும் கல்லூரியில் உள்ள பயிற்சி ஆளர்கள் ரத்ததானம் செய்தனர்.

முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் நோயாளிகள், அறுவை சிகிச்சை நோயாளிகள், விபத்து சிகிச்சை நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...