பொள்ளாச்சி: பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து பெரிய ரத்ததான முகாமை நடத்தினர். 200 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கியுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய ரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் ரெட் கிராஸ் மற்றும் NSS மாணவர்கள் இந்த முகாமில் ரத்த தானம் வழங்கினர். பொள்ளாச்சி ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, செவிலியர்கள் அன்னக்கொடி, அனுராதா, திலகமணி மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, ஆய்வக நிபுணர் மகாலட்சுமி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் கலந்து கொண்டனர்.



இவர்களுடன் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களும், திருச்சியிலிருந்து வந்த செவிலியர் கல்லூரி மாணவிகளும் இந்த முகாமில் பங்கேற்றனர். இந்த முகாமில் 200 மாணவர்கள் மற்றும் கல்லூரியில் உள்ள பயிற்சி ஆளர்கள் ரத்ததானம் செய்தனர்.

முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் நோயாளிகள், அறுவை சிகிச்சை நோயாளிகள், விபத்து சிகிச்சை நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...