பொள்ளாச்சி ஒடையகுளம் நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்

பொள்ளாச்சி ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.


Coimbatore: பொள்ளாச்சி ஆழியாறு அணை பாசன திட்டத்தில் உள்ள குளப்பத்துக் குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு விசாகபதி என்பவரும், ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு நீலகண்டன், சந்துரு, ராஜமாணிக்கம், கார்த்திகேயன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஐந்து பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும் பொள்ளாச்சி சார் ஆட்சியருமான கேத்தரின் சரண்யா வழங்கினார்.



அவர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...