பொள்ளாச்சி ஒடையகுளம் நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்

பொள்ளாச்சி ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.


Coimbatore: பொள்ளாச்சி ஆழியாறு அணை பாசன திட்டத்தில் உள்ள குளப்பத்துக் குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு விசாகபதி என்பவரும், ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு நீலகண்டன், சந்துரு, ராஜமாணிக்கம், கார்த்திகேயன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஐந்து பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும் பொள்ளாச்சி சார் ஆட்சியருமான கேத்தரின் சரண்யா வழங்கினார்.



அவர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...