பொள்ளாச்சி ஒடையகுளம் நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்

பொள்ளாச்சி ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.


Coimbatore: பொள்ளாச்சி ஆழியாறு அணை பாசன திட்டத்தில் உள்ள குளப்பத்துக் குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு விசாகபதி என்பவரும், ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு நீலகண்டன், சந்துரு, ராஜமாணிக்கம், கார்த்திகேயன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஐந்து பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும் பொள்ளாச்சி சார் ஆட்சியருமான கேத்தரின் சரண்யா வழங்கினார்.



அவர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...