துடியலூர் அரிமா சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன

கோவை துடியலூர் அருகே பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு துடியலூர் அரிமா சங்கம் சார்பில் சீருடைகள், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் பள்ளி மேம்பாட்டுக்கு உறுதியளித்தார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு துடியலூர் அரிமா சங்கம் சார்பில் சீருடைகள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கோவை துடியலூர் அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்ற நிலையில், சமூக சேவை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து அனைவரையும் வரவேற்றார். அரிமா சங்கத் தலைவர் பி.பி.ஆறுச்சாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் பேசிய அரிமா சங்கத் தலைவர் ஆறுச்சாமி, பள்ளியின் சுற்றுச் சுவரை விரைவில் சீரமைத்துத் தருவதாகவும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு சீருடைகள், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த உதவிப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் செயலாளர் நித்தியானந்தம், பொருளாளர் ஆறுமுகம், பட்டயத்தலைவர் ஏ.வி.முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அரிமா சங்க முன்னாள் தலைவர்களான ராம மூர்த்தி, அய்யாசாமி, சுந்தர்ராஜ், தம்பு நாயக்கர் மற்றும் உறுப்பினர்களான ராஜா, சர்குணம், குமார், மகேஷ், முத்துவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் ஸ்மைலின் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...