கிருஷ்ண ஜெயந்தி: தாராபுரம் சாய்பாபா கோவிலில் மாறுவேடப் போட்டி - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரம் சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாறுவேடப் போட்டி நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.



Coimbatore: தாராபுரம் சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு "இயலாதவர்களை தேடி" என்ற உதவி சேவை திட்டத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாறுவேடப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கிருஷ்ணரை வழிபட்டனர். மாறுவேடப் போட்டியைத் தொடர்ந்து நடன போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் N. கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் S. முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புக்கண்ணன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

பரிசு வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்து உணவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர அவை தலைவர் கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினர் யூசப், திமுக முன்னாள் நிர்வாகிகள், திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் எம் ஜெய்லானி, சமூக நலத்துறை கரூர் மாவட்ட திட்ட அலுவலர் ஜி நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...