கிருஷ்ண ஜெயந்தி: தாராபுரம் சாய்பாபா கோவிலில் மாறுவேடப் போட்டி - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரம் சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாறுவேடப் போட்டி நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.



Coimbatore: தாராபுரம் சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு "இயலாதவர்களை தேடி" என்ற உதவி சேவை திட்டத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாறுவேடப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கிருஷ்ணரை வழிபட்டனர். மாறுவேடப் போட்டியைத் தொடர்ந்து நடன போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் N. கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் S. முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புக்கண்ணன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

பரிசு வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்து உணவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர அவை தலைவர் கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினர் யூசப், திமுக முன்னாள் நிர்வாகிகள், திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் எம் ஜெய்லானி, சமூக நலத்துறை கரூர் மாவட்ட திட்ட அலுவலர் ஜி நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...