உடுமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனமாடி, பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.



தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.



குழந்தைகள் கிருஷ்ணர் பாடல்களுக்கு நடனமாடியதோடு, பக்தி பாடல்களையும் பாடி அனைவரையும் கவர்ந்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக உரியடித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று உரியடித்தனர்.

இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் வடுகநாதன், இளைஞர் அணி பாலகுரு, இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல், விஸ்வ ஹிந்து பரிஷத் உடுமலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலகலப்பான பங்கேற்பால் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...