உடுமலை வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

உடுமலை வனப்பகுதியில் முறையான அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கள்ளச்சாராயப் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருவதால், காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி மற்றும் குருமலை குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், மாவடப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த நான்கு பேரும், திருமூர்த்திமலை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூன்று பேரும் வனத்துறையின் முன் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேருக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டது.



இதேபோல், அதே பகுதிக்கு மாடுகள் வாங்கச் சென்ற உடுமலை தாலுகா ராவணாபுரம் மற்றும் தேவனூர்புதூரைச் சேர்ந்த ஐந்து பேரும் வனத்துறை அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்தது. இவர்களுக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தம் 12 நபர்களுக்கு ரூ.2,40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் மாவடப்பு மற்றும் காட்டுப்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு வனத்துறையின் முன் அனுமதியின்றி வெளிநபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...