உடுமலை வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

உடுமலை வனப்பகுதியில் முறையான அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கள்ளச்சாராயப் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருவதால், காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி மற்றும் குருமலை குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், மாவடப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த நான்கு பேரும், திருமூர்த்திமலை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூன்று பேரும் வனத்துறையின் முன் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேருக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டது.



இதேபோல், அதே பகுதிக்கு மாடுகள் வாங்கச் சென்ற உடுமலை தாலுகா ராவணாபுரம் மற்றும் தேவனூர்புதூரைச் சேர்ந்த ஐந்து பேரும் வனத்துறை அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்தது. இவர்களுக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தம் 12 நபர்களுக்கு ரூ.2,40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் மாவடப்பு மற்றும் காட்டுப்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு வனத்துறையின் முன் அனுமதியின்றி வெளிநபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...