கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலில் சமத்துவ அன்னதானம்

கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் கணபதி ஹோமம், பால்குடம் எடுத்தல், முளைப்பயிர் ஏற்படுத்தல், கும்மிப்பாட்டு நடனம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சமத்துவ அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான், மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனைப்படி, ஜாதி மத பேதமின்றி பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகளை செய்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, இந்த விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது.



அன்னதானத்தில் அரிசி சாதம், கதம்பம் சாம்பார், கதம்ப பொரியல், வந்த குளம்பு, ரசம், காய்கறி கூட்டு, அப்பளம், வடை, கோதுமை பாயாசம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த சமத்துவ அன்னதானத்தை பெண் பேரூராட்சி தலைவர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மனைவி, தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி, துணைத்தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



மேலும், கோயிலில் திருப்பணி ஆற்றும் பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் காலை மற்றும் மாலை சிற்றுண்டியை ஆரோக்கிய ஜான் வழங்கினார். இக்கோவிலில் விநாயகர், பதஞ்சலி முனிவர், எல்லை ஜக்கம்மா, ராகு, கேது, சப்த கன்னிமார், தடிக்காரபோத்தி, சிவன், நந்தீஸ்வரர், உண்ணாமலை அம்மன், அகத்தியர், முருகன், சிங்க வாகன பீடம், ஸ்வர்ண காலபைரவர், பேச்சியம்மன், மயானகாளி, சுடலைமாடன் ஆகிய கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்படுகிறது. ராகு கேது பெயர்ச்சி காலங்களிலும், விநாயகர் சதுர்த்தி, அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...