கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலில் சமத்துவ அன்னதானம்

கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் கணபதி ஹோமம், பால்குடம் எடுத்தல், முளைப்பயிர் ஏற்படுத்தல், கும்மிப்பாட்டு நடனம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சமத்துவ அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான், மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனைப்படி, ஜாதி மத பேதமின்றி பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகளை செய்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, இந்த விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது.



அன்னதானத்தில் அரிசி சாதம், கதம்பம் சாம்பார், கதம்ப பொரியல், வந்த குளம்பு, ரசம், காய்கறி கூட்டு, அப்பளம், வடை, கோதுமை பாயாசம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த சமத்துவ அன்னதானத்தை பெண் பேரூராட்சி தலைவர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மனைவி, தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி, துணைத்தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



மேலும், கோயிலில் திருப்பணி ஆற்றும் பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் காலை மற்றும் மாலை சிற்றுண்டியை ஆரோக்கிய ஜான் வழங்கினார். இக்கோவிலில் விநாயகர், பதஞ்சலி முனிவர், எல்லை ஜக்கம்மா, ராகு, கேது, சப்த கன்னிமார், தடிக்காரபோத்தி, சிவன், நந்தீஸ்வரர், உண்ணாமலை அம்மன், அகத்தியர், முருகன், சிங்க வாகன பீடம், ஸ்வர்ண காலபைரவர், பேச்சியம்மன், மயானகாளி, சுடலைமாடன் ஆகிய கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்படுகிறது. ராகு கேது பெயர்ச்சி காலங்களிலும், விநாயகர் சதுர்த்தி, அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...