கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலில் சமத்துவ அன்னதானம்

கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் கணபதி ஹோமம், பால்குடம் எடுத்தல், முளைப்பயிர் ஏற்படுத்தல், கும்மிப்பாட்டு நடனம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சமத்துவ அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான், மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனைப்படி, ஜாதி மத பேதமின்றி பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகளை செய்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, இந்த விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது.



அன்னதானத்தில் அரிசி சாதம், கதம்பம் சாம்பார், கதம்ப பொரியல், வந்த குளம்பு, ரசம், காய்கறி கூட்டு, அப்பளம், வடை, கோதுமை பாயாசம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த சமத்துவ அன்னதானத்தை பெண் பேரூராட்சி தலைவர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மனைவி, தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி, துணைத்தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



மேலும், கோயிலில் திருப்பணி ஆற்றும் பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் காலை மற்றும் மாலை சிற்றுண்டியை ஆரோக்கிய ஜான் வழங்கினார். இக்கோவிலில் விநாயகர், பதஞ்சலி முனிவர், எல்லை ஜக்கம்மா, ராகு, கேது, சப்த கன்னிமார், தடிக்காரபோத்தி, சிவன், நந்தீஸ்வரர், உண்ணாமலை அம்மன், அகத்தியர், முருகன், சிங்க வாகன பீடம், ஸ்வர்ண காலபைரவர், பேச்சியம்மன், மயானகாளி, சுடலைமாடன் ஆகிய கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்படுகிறது. ராகு கேது பெயர்ச்சி காலங்களிலும், விநாயகர் சதுர்த்தி, அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...