பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி இரண்டு பேர் பலி

பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவன் மற்றும் கூலித் தொழிலாளி ஆகிய இருவர் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, சிங்கையன் புதூர் பகுதியில் கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்கச் சென்ற இருவர் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

விக்னேஸ்வரன் (28) என்ற தேங்காய் பறிக்கும் கூலித் தொழிலாளி, தனது உறவினர் பிரபுவின் மகன் விஷ்ணு (அரசு பள்ளி 2ஆம் வகுப்பு மாணவன்) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அன்று கல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடினர்.

அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தபோது, இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவன் மற்றும் கூலித் தொழிலாளி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...