பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி இரண்டு பேர் பலி

பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவன் மற்றும் கூலித் தொழிலாளி ஆகிய இருவர் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, சிங்கையன் புதூர் பகுதியில் கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்கச் சென்ற இருவர் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

விக்னேஸ்வரன் (28) என்ற தேங்காய் பறிக்கும் கூலித் தொழிலாளி, தனது உறவினர் பிரபுவின் மகன் விஷ்ணு (அரசு பள்ளி 2ஆம் வகுப்பு மாணவன்) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அன்று கல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடினர்.

அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தபோது, இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவன் மற்றும் கூலித் தொழிலாளி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...