வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வால்பாறை பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வருகை புரிந்தார்.



வால்பாறையில் உள்ள அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், பகுதி வழியாக வால்பாறை, கருமலை, பச்சமலை, அக்காமலை, மூவிஸ், சோலையார், பண்ணி மேடு சைக்கிள் முடி, போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேல் திமுகவிற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளதாகவும், வால்பாறை மேல் தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேல் வாக்கு அளித்ததாகவும் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.

வால்பாறை பகுதியில் உள்ள பிரச்சினைகள், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, மாற்று தொழில் மற்றும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்தார்.

வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர், மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...