வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வால்பாறை பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வருகை புரிந்தார்.



வால்பாறையில் உள்ள அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், பகுதி வழியாக வால்பாறை, கருமலை, பச்சமலை, அக்காமலை, மூவிஸ், சோலையார், பண்ணி மேடு சைக்கிள் முடி, போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேல் திமுகவிற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளதாகவும், வால்பாறை மேல் தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேல் வாக்கு அளித்ததாகவும் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.

வால்பாறை பகுதியில் உள்ள பிரச்சினைகள், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, மாற்று தொழில் மற்றும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்தார்.

வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர், மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...