மடத்துக்குளத்தில் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், தொல். திருமாவளவன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மடத்துக்குளம் பெரியவட்டாரம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மடத்துக்குளம் பேரூர் செயலாளர் சீட் கவர் சேகர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த.சதீஷ்குமார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, அரசு போக்குவரத்து கழகம் எல்எல்எப் மாநில துணைத்தலைவர் சி டி சி சத்தியமூர்த்தி, உடுமலை இப்ராஹீம் அலி, மடத்துக்குளம் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் தமிழரசன், கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, மடத்துக்குளம் பிலவேந்தன் கணியூர் பேரூர் செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில், கண்ணாடிப்புத்தூர், பெரிய வட்டாரம், கழுகரை உள்ளிட்ட பல பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார். இந்நிகழ்விலும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...