மடத்துக்குளத்தில் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், தொல். திருமாவளவன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மடத்துக்குளம் பெரியவட்டாரம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மடத்துக்குளம் பேரூர் செயலாளர் சீட் கவர் சேகர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த.சதீஷ்குமார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, அரசு போக்குவரத்து கழகம் எல்எல்எப் மாநில துணைத்தலைவர் சி டி சி சத்தியமூர்த்தி, உடுமலை இப்ராஹீம் அலி, மடத்துக்குளம் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் தமிழரசன், கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, மடத்துக்குளம் பிலவேந்தன் கணியூர் பேரூர் செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில், கண்ணாடிப்புத்தூர், பெரிய வட்டாரம், கழுகரை உள்ளிட்ட பல பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார். இந்நிகழ்விலும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...