கோவையில் 750 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன - அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்டத்தில் 750 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. ரேஷன் பொருட்களின் தட்டுப்பாடுகள் 90% சரி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். மேலும் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.



நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்டத்தில் 1,542 ரேஷன் கடைகள் இருப்பதாகவும், 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயனடைவதாகவும் தெரிவித்தார். இன்றைய தினம் 750 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 6,000 பேருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

குடும்ப அட்டை கோரி மனு அளித்த சிலருக்கு கிடைக்காத சூழ்நிலை குறித்து விளக்கமளித்த அமைச்சர், மனுக்களில் குறைபாடுகள் அல்லது ஒரே குடும்பத்தில் இரண்டு அட்டைகள் கோரப்பட்டிருந்தால் அவை தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீண்டும் மனு அளித்தால், அது குறித்து ஆய்வு மேற்கொண்டு நியாயமானதாக இருந்தால் அதனையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்தும் பேசிய அமைச்சர், ஏறத்தாழ 1 கோடியே 17 லட்சம் பேருக்கு இத்தொகை வழங்கப்படுவதாகவும், கூடுதலாக 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மனு அளிக்கலாம் என்றும், அந்த மனுக்களில் எந்த குறைபாடும் இல்லாவிட்டால் அவர்களும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் இருந்த தட்டுப்பாடுகள் குறித்தும் பேசிய அமைச்சர், தற்போது 90 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றையும் சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் இதனை கண்காணித்து வருவதாகவும், குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.



ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாத பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கண் விழி பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளதாகவும், கைரேகை பதிவாகாத பட்சத்தில் கண் கருவிழி மூலம் பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்தும் விளக்கமளித்த ஆட்சியர், சாரதா மில் சாலை, பாலக்காடு சாலை பழுதடைந்துள்ளதாகவும், பாதாள சாக்கடை பணிகள் முடிந்தாலும் சில பணிகள் தொடர்வதாகவும் கூறினார். மழை காரணமாகவும், இரவு நேரங்களில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் தாமதங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்தார். வரும் 15 நாட்களுக்குள் மாநகரில் முக்கிய சாலைகளின் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...