பல்லடத்தில் 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க திட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் நிலத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான மாணிக்கபுரம் சாலையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை மீட்க அங்காளம்மன் கோயில் குழுவினர் இந்து அறநிலைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஆனால், இந்து சமய அறநிலைத்துறையின் ஆய்வாளர் பேச்சுவார்த்தைக்கு வராததால், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இப்பகுதியில் வசிக்கும் சுமார் 120க்கும் மேற்பட்டோரின் வீடுகள் இடிக்கப்படும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தனர்.



மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலும், வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தங்களின் நிலை மிகவும் துயரமாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...