விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள 5 பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வேண்டி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்கள் கிராமங்களிலேயே சிலை வைக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.



Coimbatore: கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டுமென பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் ஊர் மக்கள் என பலரும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, நீர் நிலைகளில் கரைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள தூமனூர், கண்டிவழி, ஜம்புகண்டி, கொண்டனூர் உள்ளிட்ட 5 பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பழங்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, ஒவ்வொரு முறையும் அருகே உள்ள கிராமங்களில் சென்று வழிபாடு செய்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதாகவும், இந்த முறை தங்களது கிராமங்களிலேயே சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற கூறியதால் மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...