பொள்ளாச்சி அரசு தொடக்கப்பள்ளியில் தரமற்ற பராமரிப்பு: மாணவர்கள், பெற்றோர் முற்றுகைப் போராட்டம்

பொள்ளாச்சி நல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தரமற்ற பராமரிப்பு பணிகள் குறித்து மாணவர்களும் பெற்றோரும் சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தரமற்றதாக இருப்பதாக கூறி, மாணவர்களும் பெற்றோரும் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த பழமையான பள்ளியில் 29 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்கள் பலமின்றியும் இருந்த நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் பள்ளிக்குள் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, பள்ளியை சீரமைக்க கல்வித்துறை அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையிட்டனர். அதன் பேரில் பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.



தற்போது பள்ளியின் மேற்கூரையை அகற்றி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், புதிய மரம் மற்றும் ஓடுகளை வாங்காமல் பழைய பொருட்களையே பயன்படுத்துவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள், மாணவர்களுடன் சேர்ந்து வகுப்புகளை புறக்கணித்து சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் முற்றுகையை கைவிட்டு, சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.

தரமற்ற பராமரிப்பு பணிகளால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாகவும், இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், பள்ளியை மிகுந்த பாதுகாப்புடன் சீரமைத்து, தரமான கல்வி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

"எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். தரமற்ற பராமரிப்பு பணிகள் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதிகாரிகள் இதனை தீவிரமாக எடுத்துக்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று திவ்யா என்ற பெற்றோர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...