தாராபுரம் அருகே அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மற்றும் பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் திருக்கோவிலின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மற்றும் பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் திருக்கோவிலின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த 75 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலின் சிற்பங்கள் காசியில் வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவை. விழாவின் போது கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன சாத்துதல் நிகழ்ச்சியுடன் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.



யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, முதலில் அவிமுக்த சுவேத கணபதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. இறுதியாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தாராபுரம், சங்கரண்டாம்பாளையம், நொச்சிபாளையம், குள்ளகாளிபாளையம், ஆலம்பாளையம், ஊதியூர் குண்டடம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால், ஊர் பொதுமக்கள், லக்கமா நாயக்கன்பட்டி தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையிலான 11 அர்ச்சகர்கள், மற்றும் கோவில் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...