அவினாசி அத்திகடவு திட்டம்: பாஜக பெருமை கொள்வது நியாயமற்றது - கொமதேக தலைவர் ஈஸ்வரன் விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கொமதேக தலைவர் ஈஸ்வரன், அவினாசி அத்திகடவு திட்டத்தில் பாஜகவின் பங்களிப்பு இல்லை என்றும், மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை என்றும் விமர்சித்தார்.



Coimbatore: கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் அவினாசி அத்திகடவு திட்டம் குறித்து பேசினார்.

அவினாசி அத்திகடவு திட்டம் 60 ஆண்டு கால போராட்டத்தின் விளைவு என்றும், 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி இத்திட்டத்திற்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டதாகவும் ஈஸ்வரன் கூறினார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் இத்திட்டத்தை கவனிக்கவில்லை என்றும், கொமதேக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 2016-ல் அதிமுக அரசு ஆய்வுக்கு 3 கோடி ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.



"அவினாசி அத்திகடவு திட்டத்தின் 67 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவு பெற்றிருந்தது. எடப்பாடியார் இந்த திட்டத்தை துவங்கியதற்கு அனைத்து தரப்பு சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று ஈஸ்வரன் கூறினார். தற்போதைய திமுக அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டினார்.

பாஜக தலைவர்களின் கூற்றுகளை விமர்சித்த ஈஸ்வரன், "ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. ஆனால் பாஜக தலைவர்கள் தாங்கள்தான் இத்திட்டத்தைக் கொண்டு வந்ததுபோல் பேசுகின்றனர். பெருமையில் மட்டும் பங்கு கேட்கின்றனர்," என்றார்.

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றிற்கு பாஜக எந்த முன்னேற்றமும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய ஈஸ்வரன், "பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு 4.5 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் பிரதமரிடம் பேசி திட்டங்களை வாங்கிக் கொடுங்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...