உடுமலை அருகே கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏல வாக்குவாதம்: ஏலம் ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏலத்தின் போது வாக்குவாதம் ஏற்பட்டதால், ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



கொங்கல் நகரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் 2024 ஆகஸ்ட் 22 முதல் 2025 ஆகஸ்ட் 21 வரை காய்கறி சந்தை நடத்த சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் இன்று காய்கறி சந்தை ஏலம் நடைபெறும் என ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டோ விளம்பரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் பத்தாயிரம் ரூபாய் தொகையை ஊராட்சியின் பெயரில் டிடியாக எடுத்து ஊராட்சி அலுவலகத்தில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொங்கல் நகரம் ஊராட்சியைச் சேர்ந்த ராமலிங்கம், செந்தில் குமார், சுரேஷ், தனபால் ஆகிய நான்கு பேர் ஊராட்சி செயலாளர் மகாலிங்கத்திடம் டிடியை வழங்கினர். ஆனால், ஏலம் துவங்குவதற்கு முன் ஏலம் எடுக்க வந்த நான்கு பேருக்கு ஆதரவாக உடன் வந்தவர்கள் கூச்சல் குழப்பம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கொங்கல் நகரம் ஊராட்சி அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் இன்று நடைபெற இருந்த வாரச்சந்தை ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். கொங்கல் நகரம் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...