பொள்ளாச்சியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்; விற்பனை மந்தம் குறித்து உற்பத்தியாளர்கள் கவலை

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



கோவை: வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.



மூன்று அடி முதல் 10 அடி வரையிலான அளவுகளில் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை விதித்துள்ள விதிமுறைகளின்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கிழங்கு மாவு, காகித கூழ் மற்றும் எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப்பொருட்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.



ஆனால், வழக்கமாக பத்து மாதங்களாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே விறுவிறுப்பாக விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே காணப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழக அரசு, காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் விநாயகர் சிலை வாங்க தயக்கம் காட்டுவதாகவும், ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட சிலைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.



இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மட்டுமே மக்கள் விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...