பொள்ளாச்சியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்; விற்பனை மந்தம் குறித்து உற்பத்தியாளர்கள் கவலை

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



கோவை: வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.



மூன்று அடி முதல் 10 அடி வரையிலான அளவுகளில் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை விதித்துள்ள விதிமுறைகளின்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கிழங்கு மாவு, காகித கூழ் மற்றும் எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப்பொருட்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.



ஆனால், வழக்கமாக பத்து மாதங்களாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே விறுவிறுப்பாக விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே காணப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழக அரசு, காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் விநாயகர் சிலை வாங்க தயக்கம் காட்டுவதாகவும், ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட சிலைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.



இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மட்டுமே மக்கள் விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...