பொள்ளாச்சியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்; விற்பனை மந்தம் குறித்து உற்பத்தியாளர்கள் கவலை

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



கோவை: வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.



மூன்று அடி முதல் 10 அடி வரையிலான அளவுகளில் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை விதித்துள்ள விதிமுறைகளின்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கிழங்கு மாவு, காகித கூழ் மற்றும் எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப்பொருட்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.



ஆனால், வழக்கமாக பத்து மாதங்களாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே விறுவிறுப்பாக விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே காணப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழக அரசு, காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் விநாயகர் சிலை வாங்க தயக்கம் காட்டுவதாகவும், ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட சிலைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.



இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மட்டுமே மக்கள் விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...