கோவையில் போலி காவல்துறை அதிகாரியாக நடித்து மோசடி: துப்பாக்கி, லத்தி உட்பட பல பொருட்கள் பறிமுதல்

கோவை மாச்சேகவுண்டன் பாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்து காவல்துறை அடையாள அட்டை, துப்பாக்கி, லத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே உள்ள மாச்சேகவுண்டன் பாளையத்தில் போலி காவல்துறை அதிகாரியாக நடித்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாச்சேகவுண்டன் பாளையத்தில் வசிக்கும் தினேஷ் என்பவரின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடியேறினார். அப்போது அவர் தனது ஆதார் அட்டை நகல் மற்றும் தனது சகோதரர் வினு என்பவரின் காவல்துறை அடையாள அட்டை நகலை கொடுத்துள்ளார்.



சில நாட்களுக்கு முன்பு, தினேஷ் அப்பகுதியில் உள்ள கோவிலில் வினுவை சந்தித்தார். வினு தன்னை அமைச்சருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறினார். இதற்கு 2 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி தினேஷ் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் வெளியே பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே கைத்துப்பாக்கி, காவல்துறையினர் பயன்படுத்தும் லத்தி, மெட்டல் டிடெக்டர், தமிழ்நாடு காவல்துறை என அச்சிடப்பட்ட அடையாள அட்டை ஆகியவை இருந்தன.



இதனையடுத்து, தினேஷ் இந்த பொருட்களை மதுக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், வினு மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 34 வயதான வினு கைது செய்யப்பட்டார். வீரபத்திரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...