பார்த்தீனியம் மேலாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம் பல்லடம் வட்டத்தில் பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பார்த்தீனியம் கட்டுப்பாடு குறித்த தொழில்நுட்பங்கள் விளக்கப்பட்டன.


Coimbatore: பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் 22 வரை நடைபெறும் இந்த விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பார்த்தீனியம் பற்றியும், அதன் தீமைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாம், மத்திய அரசின் களை மேலாண்மை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டம், உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்டது.



ஆகஸ்ட் 21 ஆம் தேதி, பல்லடம் வட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பார்த்தீனிய மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பார்த்தீனியம் என்ற நச்சுக்களையை உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த களை பூப்பதற்கு முன் நிலத்திலிருந்து அகற்றி உரமாக்கி மண்ணின் வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.



இந்த விழிப்புணர்வு முகாமில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப் பேராசிரியர் முனைவர் ச. பாரதி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமின் மூலம் விவசாயிகள் பார்த்தீனியம் களையின் தீமைகளை உணர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் முறைகளை அறிந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...