பார்த்தீனியம் மேலாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம் பல்லடம் வட்டத்தில் பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பார்த்தீனியம் கட்டுப்பாடு குறித்த தொழில்நுட்பங்கள் விளக்கப்பட்டன.


Coimbatore: பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் 22 வரை நடைபெறும் இந்த விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பார்த்தீனியம் பற்றியும், அதன் தீமைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாம், மத்திய அரசின் களை மேலாண்மை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டம், உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்டது.



ஆகஸ்ட் 21 ஆம் தேதி, பல்லடம் வட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பார்த்தீனிய மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பார்த்தீனியம் என்ற நச்சுக்களையை உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த களை பூப்பதற்கு முன் நிலத்திலிருந்து அகற்றி உரமாக்கி மண்ணின் வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.



இந்த விழிப்புணர்வு முகாமில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப் பேராசிரியர் முனைவர் ச. பாரதி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமின் மூலம் விவசாயிகள் பார்த்தீனியம் களையின் தீமைகளை உணர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் முறைகளை அறிந்து கொண்டனர்.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...