பார்த்தீனியம் மேலாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம் பல்லடம் வட்டத்தில் பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பார்த்தீனியம் கட்டுப்பாடு குறித்த தொழில்நுட்பங்கள் விளக்கப்பட்டன.


Coimbatore: பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் 22 வரை நடைபெறும் இந்த விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பார்த்தீனியம் பற்றியும், அதன் தீமைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாம், மத்திய அரசின் களை மேலாண்மை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டம், உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்டது.



ஆகஸ்ட் 21 ஆம் தேதி, பல்லடம் வட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பார்த்தீனிய மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பார்த்தீனியம் என்ற நச்சுக்களையை உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த களை பூப்பதற்கு முன் நிலத்திலிருந்து அகற்றி உரமாக்கி மண்ணின் வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.



இந்த விழிப்புணர்வு முகாமில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப் பேராசிரியர் முனைவர் ச. பாரதி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமின் மூலம் விவசாயிகள் பார்த்தீனியம் களையின் தீமைகளை உணர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் முறைகளை அறிந்து கொண்டனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...