உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் எலையமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, செந்தில்குமார், உடுமலை தாசில்தார் சுந்தரம் ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் தும்பலபட்டி, கல்லாபுரம், எலையமுத்தூர், குருவப்ப நாயக்கனூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். வருவாய் துறை சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.



அதிகாரிகள் மனுக்களின் தன்மையை ஆய்வு செய்த பின்னர், பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மனு அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி பழனிச்சாமி, காளியம்மாள், பொதுக்குழு உறுப்பினர் பாபு, தாசில்தார்கள் விவேகானந்தன், கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சி பாய், சுப்பிரமணியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் சந்தோஷ்குமார், ஷேக்பரீத், ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...