உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் எலையமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, செந்தில்குமார், உடுமலை தாசில்தார் சுந்தரம் ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் தும்பலபட்டி, கல்லாபுரம், எலையமுத்தூர், குருவப்ப நாயக்கனூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். வருவாய் துறை சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.



அதிகாரிகள் மனுக்களின் தன்மையை ஆய்வு செய்த பின்னர், பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மனு அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி பழனிச்சாமி, காளியம்மாள், பொதுக்குழு உறுப்பினர் பாபு, தாசில்தார்கள் விவேகானந்தன், கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சி பாய், சுப்பிரமணியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் சந்தோஷ்குமார், ஷேக்பரீத், ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...