கோவையில் ஜீவாவின் 118வது பிறந்தநாள்: மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் சிலைக்கு மரியாதை

கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமரர் ஜீவாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஜீவா இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவையில் மறைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமரர் ஜீவாவின் 118வது பிறந்தநாள் இன்று (21.08.2024) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், ஜீவா இல்லத்தில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அமரர் ஜீவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த இலக்கியவாதி, மேடை பேச்சாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். மகாத்மா காந்தி அடிகளால் "நாட்டின் சொத்து" என்று பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் என். பெரியசாமி, மாவட்ட செயலாளர் சி. சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே. ஜேம்ஸ், எம். குணசேகர், மாவட்ட பொருளாளர் சி. தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. மௌனசாமி, ஆர். துரைசாமி, சாந்திசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இஸ்கப் மாநிலப் பொருளாளர் எஸ். கோட்டியப்பன், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் என். செல்வராஜ், பி. சுப்ரமணியன், கே. புருசோத்தமன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் ஏ. அஸ்ரப்அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிழக்கு மண்டல செயலாளர் எஸ். சண்முகம், சூலூர் வடக்கு செயலாளர் பி.எஸ். ராமசாமி, மேற்கு மண்டல செயலாளர் என். சந்திரன், மத்திய மண்டல துணைச் செயலாளர் ஏ.பி. மணிபாரதி, மதுக்கரை தங்கராஜ், சூலூர் கண்ணன், அன்னூர் செல்வராஜ், ஆனைமலை எஸ். காளீஸ்வரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...