பொள்ளாச்சி அருகே திடீர் சூறாவளி: சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் திடீர் சூறாவளி காற்று வீசியது. மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று வீசியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியது.

இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



ஆழியார் பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மரம் விழுந்ததால், அந்த கார் முழுவதும் சேதமடைந்தது.



இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒரு மிகப்பெரிய ராட்சத மரம் விழுந்ததில் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால், வழக்கமாக பரபரப்பாக காணப்படும் ஆழியார்-வால்பாறை சாலை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. சாலை முழுவதும் விழுந்த மரங்களும் மரக்கிளைகளும் சிதறிக் கிடக்கின்றன.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...