கோவை மாநகராட்சி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாநகராட்சியின் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் 1587 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.





வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீத்தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 810 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாநகராட்சியில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 16 பணியாளர்கள், சிறப்பாக பணிபுரிந்த 107 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 360 மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 26 மாணவர்கள், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற 17 மாணவர்கள் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.



12-ம் வகுப்பில் பாட வாரியாக 100% தேர்ச்சி அளித்த 119 ஆசிரியர்கள், 10-ம் வகுப்பில் பாட வாரியாக 100% தேர்ச்சி அளித்த 117 ஆசிரியர்கள், கலைத்திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 10 நபர்கள், மற்றும் IIT திட்டத்தின்கீழ் தேர்ச்சி பெற்ற 5 மாணவர்கள் உட்பட மொத்தம் 1587 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் சுழற்கேடயங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மண்டலக்குழுத் தலைவர்கள், மாநகர நல அலுவலர், மாநகர கல்வி அலுவலர், நகரமைப்பு அலுவலர், மண்டல உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.









Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...