கோவை விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதல்வரை சந்தித்து வலியுறுத்திய வானதி சீனிவாசன்

கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், பல்லடுக்கு வாகன நிறுத்தகம், மாஸ்டர் பிளான், பட்டா வழங்கல், நொய்யல் நதி மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தினார் வானதி சீனிவாசன்.


கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிலத்தை நிபந்தனைகள் இல்லாமல் மத்திய அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துரைத்தார்.

வானதி சீனிவாசனுடன் மாநில நிர்வாகிகள் பேராசிரியர் கனகசபாபதி, சுமதி வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர். முக்கியமாக, கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் 1300 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட தயாராக உள்ளதாகவும், தமிழக அரசின் நிபந்தனைகளால் இத்திட்டம் தாமதமாவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை வேகப்படுத்துதல், கோயம்புத்தூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தை முழுமையாக செயல்படுத்துதல், ராஜவீதி, காந்திபுரம் மற்றும் டவுன்ஹால் பகுதிகளில் பல்லடுக்கு வாகன நிறுத்தகம் அமைத்தல், காந்திபுரம் மேம்பாலத்தில் கூடுதல் சாய்வுதளம் அமைத்தல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

மேலும், கோவை நகரப் போக்குவரத்தை ஒருங்கிணைக்க தனி ஆணையம் அமைத்தல், தியாகி குமரன் மார்க்கெட் வளாகத்தை நவீனமயமாக்குதல், கோயம்புத்தூர் மாஸ்டர் பிளானை செயல்படுத்துவதற்கு முன் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிதல் ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்.

உக்கடம் மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட சி.எம்.சி காலனி மக்களுக்கு வீடு வழங்குதல், வெரைட்டி ஹால் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துதல், சுங்கம் காந்திநகர், ஹைவே காலனி, அம்மன்குளம், மசால்லே அவுட் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குதல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

கோவை மாநகரத்தின் தூய்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல், நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்தல் போன்ற கோரிக்கைகளையும் வானதி சீனிவாசன் முதல்வரிடம் முன்வைத்தார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரின் கவனத்தை ஈர்த்து, விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...