தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசின் களை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.



இந்த ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் களை மேலாண்மை பிரிவு விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது. முகாம்களின் தொடக்க நிகழ்வாக, பல்கலைக்கழகத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பண்ணைகளில் பணிபுரியும் அனைத்து பண்ணைத் தொழிலாளர்களுக்கும் பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப. பரசுராமன் முன்னிலை வகித்து பார்த்தீனியம் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார். விழிப்புணர்வு முகாம்களில் பார்த்தீனியம் களைச் செடி, அதன் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.



மேலும், பார்த்தீனியச் செடிகளை பூக்கும் முன் பிடுங்கி உரமாக்குதல் பற்றிய செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை பிரிவின் முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப்பேராசிரியர் முனைவர் ச.பாரதி ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தினர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...