திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையில் கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பாதுகாப்பு கருதி பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள திருமூர்த்திமலை பகுதியில் கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஜல்லிமுத்தான் பாறை, குருமலை, குழிப்பட்டி, தோனி ஆறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவிலில் நடைபெறும் பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.