சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (ஆகஸ்ட் 20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குப்பேபாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலூர் (ஒருபகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்தூர், வடுகபாளையம், மொண்டிகாளிபுதூர், ரங்கப்பகவுண்டன்புதூர், மூணுகட்டியூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சோமனூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமாளபுரம், ராமாச்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கோமங்கலம்புதூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கோவை, கடைமடு, கோமங்கலபுதூர், லட்சுமிபுரம், குவுலநாயக்கன்பட்டி, வத்தநல்லூர், சத்திபாளையம், கள்ளர்பட்டிசுங்கம், கொல்லர்பட்டி, திப்பம்பட்டி, நல்லம்பள்ளி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை நாளை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் முன்னதாகவே முடிவடைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...