கோவையைச் சேர்ந்த சரவணன் அனைத்து விதமான ஃபென்சிங் போட்டிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக தேர்வு

பஞ்சாபில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற கோவையின் சரவணன், அனைத்து விதமான ஃபென்சிங் போட்டிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது.



Coimbatore: கோவையைச் சேர்ந்த சரவணன், அனைத்து விதமான ஃபென்சிங் எனும் வாள் வீச்சு சண்டை போட்டிக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியை முடித்து கோவை திரும்பிய சரவணனுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு போட்டியில், பாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள இந்த போட்டியை, தற்போது தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருவதோடு, தேசிய அளவில் சாதித்தும் வருகின்றனர்.

கோவை மாவட்ட வாள்வீச்சு சங்கத்தில் பயிற்சி பெற்ற சரவணன், தேசிய விளையாட்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று ஏ கிரேட் பயிற்சியாளர் எனும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக தகுதி பெற்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் கல்வி சார் பிரிவாக செயல்படும் பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நகரில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் நடத்திய தேர்வில் சரவணன் கலந்து கொண்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 60 பேர் கலந்து கொண்ட இதில், கோயம்புத்தூர் மாவட்ட வாள்வீச்சு சங்கத்தில் பயிற்சி பெற்ற சரவணன், தேர்வாகி, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக பணியாற்ற தகுதி பெற்றார்.

கோவை திரும்பிய வாள் வீச்சு பயிற்சியாளர் சரவணனுக்கு இரயில் நிலையத்தில் கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் வாள்வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ், பொருளாளர் சிவமுருகன் மற்றும் உறுப்பினர்கள் அரவிந்த், விது ஷங்கர், விமல், பிரசாந்த், பவிலாஸ் மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஃபென்சிங் முதன்மை பயிற்சியாளர் சரவணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...