தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதியவை உருவாக்க வேண்டும் - பொள்ளாச்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதியவற்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.



கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்தக் கூட்டத்தில் பணியின் போது ஓய்வு பெற்றவர்களுக்கும், புதிய பதவி உயர்வு பெற்றோர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கலைஞரின் கனவு இல்லத் திட்டம், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்கள் மற்றும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு, அதிகமான ஊராட்சி ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு வருவதால், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...