தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதியவை உருவாக்க வேண்டும் - பொள்ளாச்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதியவற்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.



கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்தக் கூட்டத்தில் பணியின் போது ஓய்வு பெற்றவர்களுக்கும், புதிய பதவி உயர்வு பெற்றோர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கலைஞரின் கனவு இல்லத் திட்டம், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்கள் மற்றும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு, அதிகமான ஊராட்சி ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு வருவதால், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...