போலீஸ் விசாரணைக்கு பயந்து ஓடிய இளைஞர் கோவை வாளாங்குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

கோவை பந்தய சாலையில் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவர் தப்பி ஓடி வாளாங்குளத்தில் குதித்து உயிரிழந்தார். மற்ற இருவரிடம் விசாரணை தொடர்கிறது.



கோவை: கோவை பந்தய சாலை பகுதியில் நடந்து சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து ஓடி வாளாங்குளத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒண்டிபுதூரை சேர்ந்த விஷ்வா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் கோவை பந்தய சாலை பகுதியில் நடந்து சென்றனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் இராமநாதபுரம் போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்து வந்தனர். விசாரணையின் போது விஷ்வாவின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு பயந்த விஷ்வா அங்கிருந்து தப்பி ஓடி, கோவை வாளாங்குளத்தில் குதித்து தப்ப முயன்றார். ஆனால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பந்தய சாலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.



போலீசார் விஷ்வாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, உயிரிழந்த விஷ்வாவின் நண்பர்கள் இருவரிடம் இராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையில், விஷ்வாவின் நண்பர்கள் இருவரும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...