கோவையில் ஒருவழிச் சாலையில் அரசு பேருந்து - சரக்கு ஆட்டோ மோதல்: பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்

கோவை குனியமுத்தூரில் ஒருவழிச் சாலையில் அரசு பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ மோதல் சம்பவம் நடந்துள்ளது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் அரசு பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ மோதல் சம்பவம் நடந்துள்ளது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து ஒன்று, கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே உள்ள ஒருவழிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே பாதையில் எதிர்திசையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, சாலையைக் கடக்க முயன்றது.

வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுநர், சரக்கு ஆட்டோவை கவனித்ததும், உடனடியாக பிரேக் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். எனினும், பேருந்தின் பின்பகுதி சரக்கு ஆட்டோவின் பின்புறத்தில் மோதியது. இந்த மோதலில் சரக்கு ஆட்டோ சேதமடைந்தது.

பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாட்டால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஒருவழிப் பாதையில் விதிமுறைகளை மீறி வந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...