கோவை அரசு மருத்துவமனையில் சிசிடிவி பழுது, கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்- ஏபி முருகானந்தம்

கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராக்கள் பழுது மற்றும் கழிப்பிட வசதி இல்லாமை குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Coimbatore: கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் இருப்பிட மருத்துவரிடம் சென்று விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம், மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டினார். அந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சிபிஐ விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கோவை அரசு மருத்துவமனையில் 200 சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அவை அனைத்தும் வேலை செய்யவில்லை என்றும் முருகானந்தம் தெரிவித்தார். மேலும், கழிப்பிட வசதி இல்லை என பயிற்சி மருத்துவர்கள் கூறுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இரத்தக்கறை படிந்த துணிகளை எடுக்க கூட ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

சுகாதார அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முருகானந்தம், சிசிடிவி பழுது மற்றும் கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.



Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...